ஜோகூர் பாரு, மே.28-
ஜோகூர், சுங்கை ஸ்கூடாய் ஆற்றில் சிறுமி ஒருவரின் சடலம் மிதப்பபது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 க்கும் 7 க்கும் இடைப்பட்ட வயது இருக்கலாம் என்று நம்பப்படும் அந்தச் சிறுமி, இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதைக் கண்ட 70 வயது முதியவர் ஒருவர் போலீசுக்குத் தகவல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வட்டாரத்தில் சிறுமி யாராவது காணவில்லை என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








