May 14, 2026
Thisaigal NewsYouTube
மோசடி அவசர சேவை மையத்தின் 997 அழைப்பு தற்காலிகத் துண்டிப்பு!
தற்போதைய செய்திகள்

மோசடி அவசர சேவை மையத்தின் 997 அழைப்பு தற்காலிகத் துண்டிப்பு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.16-

தேசிய மோசடிப் பதிலளிப்பு மையத்தின் 997 அவசர உதவி எண்ணில் நாளை திங்கட்கிழமை, காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சேவைத் துண்டிப்பு ஏற்படவுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் இணையவழி நிதி மோசடிப் புகார்களை அளிக்க விரும்புவோர், நேரடியாகத் தங்களின் வங்கிகள் அல்லது தொடர்புடைய நிதி நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கலாம். அவசர காலத் தொடர்பு எண்கள் அல்லது நிதி நிறுவனங்களின் புகார் பட்டியலை பேங்க் நெகாரா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுகலாம் என்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Related News

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

ஜூலை 1 முதல் அஸ்ட்ரோவில் ஆர்டிஎம் அலைவரிசை ஒளிபரப்பு நிறுத்தம்

ஜூலை 1 முதல் அஸ்ட்ரோவில் ஆர்டிஎம் அலைவரிசை ஒளிபரப்பு நிறுத்தம்

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு