ஷாஹ் அலாம், ஜூலை 9-
பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படுவதற்கு ஏதுவாக இலக்குக்கு உரிய மானியத் தொகை திட்டத்தை அரசாங்கம் இவ்வாண்டு அமல்படுத்தக்கூடும் என்று கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோக் டாக்டர் டொமினிக் லாவ் இன்று அச்சம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் ரோன் 95 இலக்குக்கு உரிய மானியத் திட்டத்தை இவ்வாண்டில் அமல்படுத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்பூண்டு இருப்பதாக டாக்டர் டொமினிக் லாவ் குறிப்பிட்டார்.
தற்போது பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசுக்கு விற்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் ரோன் 95 க்கு அரசாங்கம் வழங்கிய வரும் உதவித் தொகை மீட்டுக்கொள்ளப்பட்டு, இலக்குக்குரிய மானியத் திட்டத்தை அமல்படுத்துமானால் டீசலைப் போல பெட்ரோல் ரோன் 95 விலை உயரக்கூடும் என்று டாக்டர் டொமினிக் லாவ் அச்சம் தெரிவித்துள்ளார்.








