Aug 5, 2026
Thisaigal NewsYouTube
யூசோப் ராவுத்தர், பிரதிநிதித்துவ மனுவிற்கு விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

யூசோப் ராவுத்தர், பிரதிநிதித்துவ மனுவிற்கு விண்ணப்பம்

Share:

கோலாலம்பூர், டிச.13-


முக்கிய அரசியல் பிரமுகரின் முன்னாள் ஆய்வியல் உதவியாளரான முகமட் யூசோப் ராவுத்தர், தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் செயற்கை துப்பாக்கியை வைத்திருந்தாக கூறப்படும் இரு குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளுமாறு சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனுவை சமர்ப்பிக்கவிருக்கிறார்.

இதனை யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞர் முகமட் ரஃபிக் ரஷிட் தெரிவித்துள்ளார். இந்த இரு குற்றச்சாட்டுகளிலிருந்தும் யூசோப் ராவுத்தரை விடுவிக்கக்கோரி , வெகுவிரைவில் பிரநிதித்துவ மனு ஒன்று, சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News