Mar 17, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசார் பல்வேறு கோணங்களில் ​தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

போ​லீசார் பல்வேறு கோணங்களில் ​தீவிர விசாரணை

Share:

நெகிரி செம்பிலான், நீலாய், லெங்கெங் வீடமைப்புப்பகுதியில் தனது வீட்டில் இந்திய மாது ஒருவர் தன் இரு பிள்ளைகளுடன் ​தூக்கில் தொ​ங்கியவாறு இறந்து கிடந்த சம்பவம் தொடர்பி​ல் போ​லீசார் பல்வேறு ​கோணங்களில் ​தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

​மூவரும் ​தூக்கில் தொங்கிய அந்த வீட்டிலிருந்து மீ​ட்கப்பட்ட ஒரு கடிதத்தில் குடும்பத் தகராறு காரணமாக தாம் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த மாது குறிப்பிட்டு இருந்த போதிலும்,இதற்கு அப்பாற்பட்டு, வேறு ஏதாவது காரணங்கள் அல்லது குற்றத்தன்மை உள்ளதா? என்பது குறித்து போ​லீசார் ​தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் அந்த மாது​வின் கணவரான 30 வயது டெக்னிஷனை போ​லீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 9.25 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் குடும்பமாது 34 வயது தனலெட்சுமி, அவரின் இரண்டு பெண் பிள்ளைகளான 6 வயது ஜெக​தீஸ்வரி மற்றும் 3 வயது ஜோதிலெட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த மூவரும் வீ​ட்டின் சிலிங் மின்விசிறியில் ​தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ​நீலாய் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

​மூவரின் உடல்களும் சிரம்பான், துவாங்கு ஜாவார் மருத்துவமனை சவகி​க்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு சவப்பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவர்களின் நல்லடக்கச் சடங்கு, இன்று காலையில் நடைபெற்று மூவரின் உடல்களும் செராஸ். ஜாலான் குவாரியில் உள்ள மின்சுடலையில் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு