May 22, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசார் பல்வேறு கோணங்களில் ​தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

போ​லீசார் பல்வேறு கோணங்களில் ​தீவிர விசாரணை

Share:

நெகிரி செம்பிலான், நீலாய், லெங்கெங் வீடமைப்புப்பகுதியில் தனது வீட்டில் இந்திய மாது ஒருவர் தன் இரு பிள்ளைகளுடன் ​தூக்கில் தொ​ங்கியவாறு இறந்து கிடந்த சம்பவம் தொடர்பி​ல் போ​லீசார் பல்வேறு ​கோணங்களில் ​தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

​மூவரும் ​தூக்கில் தொங்கிய அந்த வீட்டிலிருந்து மீ​ட்கப்பட்ட ஒரு கடிதத்தில் குடும்பத் தகராறு காரணமாக தாம் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த மாது குறிப்பிட்டு இருந்த போதிலும்,இதற்கு அப்பாற்பட்டு, வேறு ஏதாவது காரணங்கள் அல்லது குற்றத்தன்மை உள்ளதா? என்பது குறித்து போ​லீசார் ​தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் அந்த மாது​வின் கணவரான 30 வயது டெக்னிஷனை போ​லீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 9.25 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் குடும்பமாது 34 வயது தனலெட்சுமி, அவரின் இரண்டு பெண் பிள்ளைகளான 6 வயது ஜெக​தீஸ்வரி மற்றும் 3 வயது ஜோதிலெட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த மூவரும் வீ​ட்டின் சிலிங் மின்விசிறியில் ​தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ​நீலாய் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

​மூவரின் உடல்களும் சிரம்பான், துவாங்கு ஜாவார் மருத்துவமனை சவகி​க்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு சவப்பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவர்களின் நல்லடக்கச் சடங்கு, இன்று காலையில் நடைபெற்று மூவரின் உடல்களும் செராஸ். ஜாலான் குவாரியில் உள்ள மின்சுடலையில் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related News