Dec 30, 2025
Thisaigal NewsYouTube
பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

Share:

செர்டாங், டிசம்பர்.30-

கடந்த மாதம் பந்திங்கில், ஆடவர் ஒருவர் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விசாரணை ஆவணங்கள் குறித்து, சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவிற்காக காத்திருப்பதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 18-ஆம் தேதி, வீடு ஒன்றில் ஆதாரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார், அங்கிருந்த 20 வயது ஆடவரைக் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையானது யாருடைய தலையீடும் இன்றி வெளிப்படையாக நடக்கும் என முஹமட் ஃபாரிட் அஹ்மாட் உறுதியளித்துள்ளார்.

Related News

பிறை டோல் சாவடி சம்பவம்: கைது செய்யப்பட்ட தம்பதி கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்

பிறை டோல் சாவடி சம்பவம்: கைது செய்யப்பட்ட தம்பதி கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்

விமான டயர் வெடிப்பு: சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிக மூடல்

விமான டயர் வெடிப்பு: சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிக மூடல்

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

கெடா, பினாங்கில் கொலை, கொள்ளை: 'ரமேஸ் கும்பலை' சேர்ந்த 20 பேர் மீது குற்றச்சாட்டு

கெடா, பினாங்கில் கொலை, கொள்ளை: 'ரமேஸ் கும்பலை' சேர்ந்த 20 பேர் மீது குற்றச்சாட்டு