Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மூன்றாவது முறையாக முதலைக் காணப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.09-

கோலாலம்பூரில் உள்ள மலாயான் மன்ஷன் கட்டடத்திற்கு அருகில் உள்ள கிள்ளான் ஆற்றில் ஒரு முதலைக் காணப்பட்டது. மூன்றாவது முறையாக அந்த முதலைக் காணப்படுவதாக நம்பப்படுகிறது. நேற்று இரவு 10.19 மணிக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு பொதுப் பாதுகாப்புப் படை விரைந்ததாக அதன் கோலாலம்பூர் பகுதி அதிகாரி மேஜர் அஹ்மாட் ஜுனைடி டுகுட் சோஹார்தோ குறிப்பிட்டார்.

மலேசியக் காவல் துறை, பெர்ஹிலிதான் எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறை ஆகியவற்றின் உதவியுடன் அந்த முதலையைப் பிடிக்க ஆயத்தமாக இருந்தாலும், அது பின்னர் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.

மோசமான வானிலை, கடுமையான நதி நீரோட்டம் காரணமாக முதலையைப் பிடிக்க நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை நின்றாலும், மின்னல் தாக்கும் அபாயம் இருந்தது. பொது மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்கவும், இதே போன்ற காட்சிகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து