மலாக்கா, ஜூலை.11-
தனது அனுமதியின்றி சந்தைக்குச் சென்றார் என்பதற்காக தனது 39 வயது மனைவியைச் சரமாரியாக அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காகக் குத்கையாளர் ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்தது.
அத்துடன் அந்த நபருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் விதித்தது. 36 வயது சீ யோங் ஃபேய் என்ற அந்த குத்தகையாளர் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி இரவு 11 மணியளவில் மலாக்கா தெங்காவில் உள்ள தாமான் டேசா பெர்தாமில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 325 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.








