கெடா, சிக் கில் ஜெனெரி மற்றும் குபாங் ஆகிய இரு இடங்களுக்கு செல்வதற்கு நேற்று வெள்ளிக்கிழமை தாம் பயன்படுத்திய ஹெலிகாப்டர் பிரதமர் துறைக்கு சொந்தமானது என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டார். சிக் கில் உள்ள ஃபெல்டா தெலோய் திமுர் என்ற இடத்தில் பிரதமரை ஏற்றி வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது , மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அவ்விடத்தில் தரையிறங்கின. இவ்விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தாம் பயன்படுத்திய அந்த ஹெலிகாப்டர் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும் என்று அன்வார் விளக்கம் அளித்துள்ளார். டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பிரதமராக இருந்த காலத்தில் அரசாங்கத் தலைவர்கள் பயன்படுத்துவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW 139 என்ற அந்த ஹெலிகாப்டர் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!


