கெடா, சிக் கில் ஜெனெரி மற்றும் குபாங் ஆகிய இரு இடங்களுக்கு செல்வதற்கு நேற்று வெள்ளிக்கிழமை தாம் பயன்படுத்திய ஹெலிகாப்டர் பிரதமர் துறைக்கு சொந்தமானது என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டார். சிக் கில் உள்ள ஃபெல்டா தெலோய் திமுர் என்ற இடத்தில் பிரதமரை ஏற்றி வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது , மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அவ்விடத்தில் தரையிறங்கின. இவ்விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தாம் பயன்படுத்திய அந்த ஹெலிகாப்டர் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும் என்று அன்வார் விளக்கம் அளித்துள்ளார். டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பிரதமராக இருந்த காலத்தில் அரசாங்கத் தலைவர்கள் பயன்படுத்துவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW 139 என்ற அந்த ஹெலிகாப்டர் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


