கெடா, சிக் கில் ஜெனெரி மற்றும் குபாங் ஆகிய இரு இடங்களுக்கு செல்வதற்கு நேற்று வெள்ளிக்கிழமை தாம் பயன்படுத்திய ஹெலிகாப்டர் பிரதமர் துறைக்கு சொந்தமானது என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டார். சிக் கில் உள்ள ஃபெல்டா தெலோய் திமுர் என்ற இடத்தில் பிரதமரை ஏற்றி வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது , மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அவ்விடத்தில் தரையிறங்கின. இவ்விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தாம் பயன்படுத்திய அந்த ஹெலிகாப்டர் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும் என்று அன்வார் விளக்கம் அளித்துள்ளார். டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பிரதமராக இருந்த காலத்தில் அரசாங்கத் தலைவர்கள் பயன்படுத்துவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW 139 என்ற அந்த ஹெலிகாப்டர் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


