May 28, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாமன்னரை அவமதித்த குற்றத்திற்காக முதியவருக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

சிப்பாங், பிப்.25-

தனது முகநூலில் மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையிலான உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

67 வயது ஜோஹாரி இஸ்மாயில் என்ற அந்த முதியவர், 30 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் ண்டனை விதிப்பதாக நீதிபதி அகமட் ஃபுவாட் ஒத்மான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி பிற்பகல் 12.59 மணியளவில் சைபர் ஜெயா, ஜாலான் இம்பேக்ட், Tower 1 இல் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையத்தின் அலுவலகத்தில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News