Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழையில் பயான் லெபஸ்  வெள்ளக்காடாக மாறின
தற்போதைய செய்திகள்

கனத்த மழையில் பயான் லெபஸ் வெள்ளக்காடாக மாறின

Share:

ஜார்ஜ்டவுன் , செப்டம்பர் 03-

இன்று காலையில் பெய்த கனத்த மழையில் பினாங்கு, பயான் லெபஸ் –ஸில் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கனத்த மழையில் பிரதான சாலைகளில் நீர் கரைப்புரண்டோடியது. இதனால் வாகனமோட்டிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஜாலான் மயங் பாசிர்1 மற்றும் ஜாலான் மஹ்சூரி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டன.

சாலைகளில் முழங்கால் அளவு வரை நின்ற நீரில் வாகனங்கள் தொடர்ந்து முன்னேறிச்செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிலைக்குத்தியது.

திடீர் வெள்ளத்தில் பலர் மோட்டார் சைக்கிள்களை தள்ளிக்கொண்டு சென்றதை காண முடிந்தது.

Related News