Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்
தற்போதைய செய்திகள்

இரண்டாவது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்

Share:

12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு, நீதி பரிபாலனத்தின் அனைத்து சட்டக்கதவுகளும் மூடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக், இனியும் மேல் முறையீடு செய்வதற்கு வழி இல்லை என்றாலும், இரண்டாவது முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.

இரண்டாவது மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், இவ்வாறு தோல்வி அடைந்தவர்கள், இரண்டாவது மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க முயற்சிக்க முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் என்.பி. சந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சூழலை முன்னிறுத்தி, இத்தகைய விண்ணப்பத்தை நஜீப் சமர்ப்பிக்க முடியும் என்று அந்த வழக்கறிஞர் வாதிடுகிறார்.

எனினும், வலுவான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே இத்தகைய மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்த முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து