12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு, நீதி பரிபாலனத்தின் அனைத்து சட்டக்கதவுகளும் மூடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக், இனியும் மேல் முறையீடு செய்வதற்கு வழி இல்லை என்றாலும், இரண்டாவது முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.
இரண்டாவது மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், இவ்வாறு தோல்வி அடைந்தவர்கள், இரண்டாவது மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க முயற்சிக்க முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் என்.பி. சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சூழலை முன்னிறுத்தி, இத்தகைய விண்ணப்பத்தை நஜீப் சமர்ப்பிக்க முடியும் என்று அந்த வழக்கறிஞர் வாதிடுகிறார்.
எனினும், வலுவான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே இத்தகைய மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்த முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


