12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு, நீதி பரிபாலனத்தின் அனைத்து சட்டக்கதவுகளும் மூடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக், இனியும் மேல் முறையீடு செய்வதற்கு வழி இல்லை என்றாலும், இரண்டாவது முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.
இரண்டாவது மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், இவ்வாறு தோல்வி அடைந்தவர்கள், இரண்டாவது மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க முயற்சிக்க முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் என்.பி. சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சூழலை முன்னிறுத்தி, இத்தகைய விண்ணப்பத்தை நஜீப் சமர்ப்பிக்க முடியும் என்று அந்த வழக்கறிஞர் வாதிடுகிறார்.
எனினும், வலுவான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே இத்தகைய மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்த முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் குறிப்பிட்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


