2030 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கான 35 சதவீதத்தில், மலேசியா ஏற்கனவே 33 சதவீதத்தை எட்டியுள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே இந்த இலக்கை அடையும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபதில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்கை 2040 இல் 40 சதவீதமாகவும், 2050 இல் 70 சதவீதமாகவும் உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ள வேளையில், சூரிய ஆற்றல் பயன்பாட்டை மேம்படுத்த பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டினாலும், உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய 51 சதவீத பங்குகள் உள்ளூர் நிறுவனங்களிடமே இருக்க வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் டத்தோ ஸ்ரீ ஃபதில்லா நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.








