Jun 3, 2026
Thisaigal NewsYouTube
அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்: மரினா திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்: மரினா திட்டவட்டம்

Share:

எதிர்வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடப் பல தரப்பிலிருந்து வாய்ப்புகள் வந்தபோதிலும், தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ஸ்குடாய் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராகிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 31 அன்று அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த ஜெசெகவின் ஒருமுறை மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரினா, மற்ற அரசியல் கட்சிகள் தன்னை அணுகியபோதும் அவர்களின் வாய்ப்புகளை மரியாதையுடன் நிராகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கிராமப்புறங்கள் மற்றும் ஃபெல்டா பகுதிகளில் மலாய் சமூகத்தினரின் ஆதரவைத் திரட்ட பாடுபட்டதாகவும், பிரச்சாரத்தின் போது துப்பப்பட்ட போதிலும் மலாய் பகுதிகளுக்குச் செல்ல தான் என்றும் அஞ்சியதில்லை என்றும் அவர் கூறினார்.

Related News