மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி,/ தன் மீது மிரட்டல் குற்றச்சாட்டுகளை சுமத்திய வர்த்தகர் ர ஆல்பர்ட் தேய் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நோட்டீஸை ஆல்பர்ட் தேய்க்கு விரைவாக வழங்குமாறு தனது வழக்கறிஞர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, கோலாலம்பூர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அசாம் பாக்கி இன்று தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு சபாவில் சில முக்கிய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் ஊழலை அம்பலப்படுத்த முயன்றபோது, அசாம் பாக்கி தன்னை மிரட்டியதாகவும், தடுத்ததாகவும் ஆல்பர்ட் தேய் குற்றம் சாட்டியிருந்தார்.
இக்குற்றச்சாட்டின் பேரில், குற்றவியல் மிரட்டல் சட்டப்பிரிவின் கீழ் போலீஸ் துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டை அவதூறு என மறுத்துள்ள அசாம் பாக்கி, இந்த போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.








