May 27, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் சுடப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது
தற்போதைய செய்திகள்

ஆடவர் சுடப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது

Share:

ஜன.9-

ஜோகூர்பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சியைக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.

அந்த உணவக கட்டட வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவின் மூலம் சுடப்பட்ட காட்சி அம்பலமாகியுள்ளது.

தலைக்கவசத்துடன், தோளில் ஒரு கைப்பேக்குடன் நீல நிற சட்டையும், காற்சட்டையும் அணிந்திருந்த ஓர்ஆடவர், இந்த கொடூர செயலைப் புரிந்துள்ளார் என்பது தெரியவந்தது.

தனது நண்பர்களுடன் உணவருந்திக்கொண்டு இருந்த உள்ளூரைச் சேர்ந்த 40 வயது நபர், தனது கைப்பேசிக்கு வந்த ஓர் அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக இருக்கையை விட்டு எழுந்து, உணவக வளாகத்தில் நடமாடிக்கொண்டு கைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று பின்புறமாக ஓடி வந்த அந்த சந்தேகப் பேர்வழி, கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்த நபரை சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் செல்லும் காட்சி, அந்த காணொளியில் தெரியவந்துள்ளது.

அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்த அந்த நபர் 7 முறை சுடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் அவரின் உடலில் நான்கு இடங்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்