May 5, 2026
Thisaigal NewsYouTube
சௌகிட்டில் ஸ்பாவில் 171 ஆண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: ஏஜிசியின் பதிலுக்காகக் காத்திருக்கிறது போலீஸ்
தற்போதைய செய்திகள்

சௌகிட்டில் ஸ்பாவில் 171 ஆண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: ஏஜிசியின் பதிலுக்காகக் காத்திருக்கிறது போலீஸ்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

கோலாலம்பூர், சௌகிட் பகுதியில் உள்ள ஒரு SPA (ஸ்பா) மையத்தில் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 208 ஆடவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில், போலீசார், சட்டத்துறை அலுவலகமான ஏஜிசியின் பதிலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையானது, கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மறுஆய்வுக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் நேற்று கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி, அந்த ஸ்பா மையத்தில் 17 அரசாங்க ஊழியர்கள் உட்பட கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆடவர்கள் மீது அரசாங்கம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து தக்கியுடின் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த சைஃபுடின், மேலதிக உத்தரவிற்காக போலீசார் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்