ஜொகூர், ஜுலை 10-
இன்று ஜொகூர் இரண்டாவது இணைப்புப் பாலத்தில் இருந்து விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலை 7:17 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் இரண்டாவது இணைப்புப் பாலத்தின் பத்தாவது கிலோமீட்டரில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி இஷாக் நோ கூறினார்.
சம்பந்தப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிள் வீதியின் ஓரத்தில் காணப்பட்டதாக அவர் கூறினார்!








