Mar 17, 2026
Thisaigal NewsYouTube
வாகனங்கள் மோதி கொண்டதில் பொறிமுறையாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனங்கள் மோதி கொண்டதில் பொறிமுறையாளர் மரணம்

Share:

உலு சிலாங்கூர், பிப்ரவரி 29 -

உலு சிலாங்கூர்,சுங்கை புவாயா டோல் அருகிலுள்ள வடக்கு தெற்கு 434.8 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் மூன்று வாகனங்கள் மோதி கொண்டதில் லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த பொறிமுறையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மதியம் 3:45 மணியளவில் நிகழ்ந்த இந்த கோரவிபத்தில் 60 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.

முன்னதாகவே புக்கிட் பெருந்துங் கிலிருந்து கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த லாரியில் பின்புறமுள்ள லோங் ஷாப்ட் சேதமடைந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் இரண்டு டன் எடை கொண்ட லாரி, மிஸ்துபிஷி ஸ்டோர்ம் கார் உட்படரோல் ஒன் ரோல் ஒப் ரொரொ லாரி ஆகியவை விபத்துக்குள்ளாகியதாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அஹ்மாட் பைசால் தாரிம் தெரிவித்தார்.

மிஸ்துபிஷி ஸ்டோர்ம் யில் பயணித்த அந்த பொறிமுறையாளர் ரொரொ லாரியை பழுதுபார்த்து கொண்டிருக்கும் பொழுது 39 வயதுடைய இரண்டு டன் லாரி ஓட்டுநர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அந்நபர் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அஹ்மாட் பைசால் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு