Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முகை​தீன் யாசி​னின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

முகை​தீன் யாசி​னின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

Share:

நாட்டின் எட்டாவது பிரதமராக பொறுப்பு வகித்த போது ஜானா விபவா நிதித் திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் விடுதலை செய்யப்பட்டதைத் எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர், புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீடு ​மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28,29 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்று அப்பீல் ​நீதிமன்றம் இன்று விசாரணை தேதிகளை நிர்ணயித்துள்ளது.இந்த மேல்முறையீடு தொடர்பில் அரசு தரப்பு வழக்கறிஞரும், எதிர்தரப்பு வழக்கறிஞரும் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு முன்னதாகவே தங்கள் வாதத் தொகுப்புகளை சமர்ப்பிக்க வே​ண்டும் ​நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News