Jul 4, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் குடியேற்றச் சோதனை: கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு தப்பியோடிய தாய்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேற்றச் சோதனை: கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு தப்பியோடிய தாய்

Share:

ஈப்போ, ஜூலை.19-

இன்று சனிக்கிழமை அதிகாலை ஈப்போவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த ஒரு பெண், தனது கணவரையும், இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டுத் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுலாவேசியைச் சேர்ந்த அந்தப் பெண், முறையான ஆவணங்கள் இல்லாததால், மலேசிய குடிநுழைவுத் துறையும் பிஜிஏ எனப்படும் பொது நடவடிக்கைப் படையும் இணைந்து நடத்திய இந்தச் சோதனையின் போது பிடிபடாமல் தப்பியோடியுள்ளார் என பேரா மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் டத்தோ ஜேம்ஸ் லீ தெரிவித்தார்.

சோதனையில் சிக்கிய கணவனும், 2 முதல் 3 வயதுடைய குழந்தைகளும் தற்போது அதிகாரிகள் வசம் உள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 120 பேர் குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் ஜேம்ஸ் லீ மேலும் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது