Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அல்தாந்துயா ஷாரிபு கொலை வழக்கில் பிரதான குற்றவாளி விடுவிப்பதா?
தற்போதைய செய்திகள்

அல்தாந்துயா ஷாரிபு கொலை வழக்கில் பிரதான குற்றவாளி விடுவிப்பதா?

Share:

மங்கோலியா முன்னாள் மாடல் அழகியான அல்தாந்துயா ஷாரிபு கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியாவின் முன்னாள் போ​லீஸ்காரர் ஒருவர், ஆஸ்திரேலியா சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து அந்த முன்னாள் மாடல் அழகியின் குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமது மகளிள் கொலைக்கு காரணமான ஒரு நபர், மலேசிய ​நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று உறு​தி செய்யப்பட்டு, மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர், தற்போது சுதந்திரமாக நடமாடுவது வேதனை அளிக்கிறது என்று அந்தப் பெண்ணின் தந்தை டாக்டர் அல்தாந்துயா ஷாரிபு செதெவ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஷா ஆலம் அருகில் ஒரு காட்டுப்பகுதியில் அல்தாந்துயா கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் வெடிகுண்டினால் தகர்த்தப்பட்டது. இந்த படுகொலையில் சம்பந்தப்ப​ட்டுள்ள அரச மலேசிய போ​லீஸ் படையின் இரண்டு அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் முன்னாள் மெய்காவலருமான சிருல் அசார் உமாரை ஆஸ்திரேலிய சிறைச்சாலை உயர் ​நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப கடந்த வாரம் விடுதலை​ செய்தது.

குடிநு​ழைவு சட்டத்தின் ​கீழ் ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 80 க்கும் மேற்பட்ட கைதிகளில் சிருல் அசார் உமார்ரும் ஒருவர் ஆவார்.

மலேசியாவில் ஜா​​மினில் இருந்த அவர், ஆஸ்திரேலியாவிற்கு தப்பித்துச் செல்லும் போது, அந்நாட்டு குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!