Jan 12, 2026
Thisaigal NewsYouTube
தாப்பாவில் சோகம்: சாலை விபத்தில் 80 வயது மூதாட்டி பலி
தற்போதைய செய்திகள்

தாப்பாவில் சோகம்: சாலை விபத்தில் 80 வயது மூதாட்டி பலி

Share:

தாப்பா, ஜனவரி.12-

தாப்பா, ஜாலான் பீடோர் லாமாவில் டேவான் புக்கிட் பாகார் முன்புறம் இன்று அதிகாலை 6.55 மணியளவில் நடந்த விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

அந்த மூதாட்டி சாலையைக் கடக்க முயன்ற போது, தாப்பா நகரை நோக்கி வேலைக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், அவரை மோதித் தள்ளினார்.

அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு 20 வயது இருக்கும் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மரணத்தை தாப்பா மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் உறுதிச் செய்தனர். பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.

Related News

சுற்றுலாத் துறை பாதுகாப்பு: 10,000 பணியாளர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'சிட்டி' (SITI) திட்டம் - அமைச்சர் ஆர். ரமணன்

சுற்றுலாத் துறை பாதுகாப்பு: 10,000 பணியாளர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'சிட்டி' (SITI) திட்டம் - அமைச்சர் ஆர். ரமணன்

கோலாலம்பூர் தனியார் பல்கலைக்கழகத்தில் வெடிப்பு: 4 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

கோலாலம்பூர் தனியார் பல்கலைக்கழகத்தில் வெடிப்பு: 4 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் குறித்து இந்த ஆண்டில் ஆய்வு

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் குறித்து இந்த ஆண்டில் ஆய்வு

முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தும் ஸாஹிட் வழக்கு கைவிடப்பட்டது ஏன்? காரணங்களை உடைத்தார் சட்டத்துறை தலைவர்

முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தும் ஸாஹிட் வழக்கு கைவிடப்பட்டது ஏன்? காரணங்களை உடைத்தார் சட்டத்துறை தலைவர்

2 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மனிதாபிமான நிதி மோசடி: என்ஜிஓ தலைவர் மீது குற்றச்சாட்டு

2 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மனிதாபிமான நிதி மோசடி: என்ஜிஓ தலைவர் மீது குற்றச்சாட்டு

இவ்வாண்டு பள்ளிகளில் பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்படும் - கல்வி அமைச்சு தகவல்

இவ்வாண்டு பள்ளிகளில் பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்படும் - கல்வி அமைச்சு தகவல்