Aug 12, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத் தொகுதியில் ரஃபிஸி சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத் தொகுதியில் ரஃபிஸி சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், மே.29-

பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தாலும், பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் தனதுச் சேவையை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

ரஃபிஸியின் ராஜினாமா இவ்வாண்டு ஜூன் 17 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் நிலையில், அது சில தரப்பினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கக்கூடும். இருந்த போதும், ரஃபிஸி தனது அமைச்சரவையில் பணியாற்றியக் காலத்தில் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில் அவரது சேவைகள் நாட்டிற்குப் பெரும் பங்களிப்பை வழங்கியதாக அஹ்மாட் மஸ்லான் பாராட்டினார்.

Related News