Mar 20, 2026
Thisaigal NewsYouTube
6-ஆம் ஆண்டு மாணவர்களை குண்டர் கும்பலில் சேர்க்க முயற்சி: 20 வயது இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

6-ஆம் ஆண்டு மாணவர்களை குண்டர் கும்பலில் சேர்க்க முயற்சி: 20 வயது இளைஞர் கைது

Share:

சிரம்பானில் உள்ள பள்ளி மாணவர்களை குண்டர் கும்பலில் சேருமாறு தூண்டியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணியளவில், சிரம்பான், கார்டன் ஹோம்ஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் முன்புறம் அந்த இளைஞர் பிடிபட்டார். நெகிரி செம்பிலான் குண்டர் கும்பல்கள் துடைத்தொழிப்பு போலீஸ் பிரிவான D7 ( டி. செவன் ) இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே நான்கு குற்றப் பின்னணிகள் உள்ளன. 1966-ஆம் ஆண்டு குண்டர் கும்பல் சட்டம், 45- ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்காக அவர் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அஸஹார் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 12-ஆம் தேதி, சிரம்பானில் 6-ஆம் ஆண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட ஒரு மோதல் குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்தது. இது குறித்து விசாரித்தபோது, சில வெளியார் கும்பல்கள் மாணவர்களைச் சட்டவிரோத குழுக்களில் சேரத் தூண்டுவது தெரியவந்தது.

இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் சமூகத்தினிடையே பரவாமல் தடுக்கவும், இதில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அஸஹார் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து