நெகிரி செம்பிலான், ஜூலை 09-
அதிகாரத்துவ நிகழ்ச்சி ஒன்றில் முக்கியப் பிரமுகர் ஒருவர் தன்னை முகத்திலேயே குத்தியதாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஜுலை 4 ஆம் தேதி மாலை 6.12 மணியளவில் நெகிரி செம்பிலான், ரெம்பவ்- வில் நிகழ்ந்தாக அந்த ஆடவர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அதிகாரத்துவ நிகழ்வில் தாம் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக அந்த பிரமுகர் தனது கைவரிசையை காட்டியுள்ளதாக அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் தொடர்பில் அந்த நபர், ரெம்பாவ் மருத்துவமனையல் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றுள்ளார் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மத் டசபிர் மோஹட் யூசூப் தெரிவித்துள்ளார்.








