Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாகனத்தில் வீசிய துர்நாற்றம், பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

வாகனத்தில் வீசிய துர்நாற்றம், பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

நிறுத்தப்பட்டு இருந்த வாகனம் ஒன்றில் வீசிய துர்நாற்றம், அக்காருக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டுப்பிடிக்க வழிவகுத்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் கோம்பாக், Diomand Square வர்த்தக மையத்தில் Four Wheel Drive வாகனத்தில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த வாகனம் கடந்த 2 நாட்களாக நகராமல் நிறுத்தப்பட்ட இடத்திலேயே இருந்ததாக அந்த வர்த்தகப் பகுதியின் மேற்பார்வையாளர் ஒருவர் சாட்சியம் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்தப் பெண்ணின் மரணத்தில் குற்றத்தன்மை இருப்பது அறிய முடியவில்லை. எனினும் சடலம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் உடலில் நடத்தப்படும் சோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று ஏசிபி முகமட் லாஸிம் தெரிவித்தார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்