கோலாலம்பூர், ஜன. 17-
மருத்துவ அதிகாரிகள் மத்தியில் அமல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வெவ்வேறு வேலை நேர முறையானது, மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய உடற்சோர்வை குறைக்க வல்லதாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்த வேலை முறையின் மூலம் பொது மக்களுக்கு நிறைவான மற்றும் தரமான மருத்துவச் சேவையை வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தவிர மருத்துவ அதிகாரி ஒருவர் அதிக நேரம் வேலை செய்வதை இம்முறை குறைக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.







