2015-ஆம் ஆண்டு தொடங்கி 2025-ஆம் ஆண்டு வரைக்குமான மலேசிய உயர்கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், வாழ்நாள் முழுவதும் கல்வி பெறுதல் என்ற PSH திட்டம், மலேசியர்கள் உயர் வருமானதைப் ஈட்டுவதற்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேலைச் சந்தையில் தங்களை இன்னமும் ஈடுப்படுத்திக்கொள்ளாத நபர்களின் திறன்களை வளர்க்க இத்திட்டம் உதவுவதோடு, இளம் வயதினர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் இந்த அரிய வாய்ப்பை வழங்கி வருகிறது.
வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் வாயிலாக, கல்வியைத் தொடர்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. என்பதுடன் அதற்கு ஏற்ற பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கற்றல் அனுபவத்தை பெறும் ஒரு களமாக இந்த தொலைதூர கல்வித் திட்டம் திகழ்கிறது.
மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வித் திட்டம் வாயிலாக கூடுதல் அனுபவமும் திறமையும் வாய்ந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக்கெள்ள முடியும் என்று கருதும் முதலாளிமார்கள் இதனை சிறந்த முன்னெடுப்பாக நோக்குகின்றனர்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


