Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வழிபறி கொள்ளையனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது

Share:

தெலுக் இந்தான், ஜன.30-

தெலுக் இந்தான், ஜாலான் சுல்தான் அப்துல்லா, ஹுவர் பார்க்கில் ஒரு வீட்டின் வாசல்படியில் பூ வியாபாரியான மாது ஒருவரை மடக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

நேற்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 65 வயது மாதுவிடமிருந்து தாங்கள் போலீஸ் புகார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தனது வீட்டின் வாசற்படியில் பூமாலைகளை விற்பனை செய்வதற்காக அவற்றை தொடுத்துக்கொண்டு இருந்த அந்த மாதுவை நோக்கி, வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்த தலைக்கவசம் அணிந்திருந்த அந்த ஆடவர், திடீரென்று அந்தப் பெண்ணை மடக்கி, சங்கிலியைப் பறித்துத்துள்ளார்.

அந்த மாது போட்ட கூச்சலினால் அவரை கீழே தள்ளிவிட்டு தங்கச் சங்கிலியை பறித்துள்ளான்.

தனது தாயாரின் கூச்சல் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த மாதுவின் மகன், கொள்ளையனை துரத்திக்கொண்டு ஓடியப் போது அவன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளான் என்று அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் அந்த மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஏசிபி அகமட் தெரிவித்தார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை