Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வழிபறி கொள்ளையனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது

Share:

தெலுக் இந்தான், ஜன.30-

தெலுக் இந்தான், ஜாலான் சுல்தான் அப்துல்லா, ஹுவர் பார்க்கில் ஒரு வீட்டின் வாசல்படியில் பூ வியாபாரியான மாது ஒருவரை மடக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

நேற்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 65 வயது மாதுவிடமிருந்து தாங்கள் போலீஸ் புகார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தனது வீட்டின் வாசற்படியில் பூமாலைகளை விற்பனை செய்வதற்காக அவற்றை தொடுத்துக்கொண்டு இருந்த அந்த மாதுவை நோக்கி, வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்த தலைக்கவசம் அணிந்திருந்த அந்த ஆடவர், திடீரென்று அந்தப் பெண்ணை மடக்கி, சங்கிலியைப் பறித்துத்துள்ளார்.

அந்த மாது போட்ட கூச்சலினால் அவரை கீழே தள்ளிவிட்டு தங்கச் சங்கிலியை பறித்துள்ளான்.

தனது தாயாரின் கூச்சல் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த மாதுவின் மகன், கொள்ளையனை துரத்திக்கொண்டு ஓடியப் போது அவன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளான் என்று அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் அந்த மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஏசிபி அகமட் தெரிவித்தார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்