Jun 22, 2026
Thisaigal NewsYouTube
செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

Share:

மலாக்கா மாநிலச் சட்டமன்றம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் கலைக்கப்பட்டு, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலின் அடிப்படையில், ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு மலாக்கா தேர்தலை எதிர்நோக்கலாம் என்று அவர் கூறினார்.

மலாக்கா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாத இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் சட்டமன்றம் கலைக்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், அதுவரை மக்களுக்கான சேவை செய்யும் கடமை தொடரும் என்றார்.

இதற்கிடையே, சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், முன்கூட்டியே கலைப்பது குறித்த இறுதி முடிவு முதலமைச்சரின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் மலாக்கா சபாநாயகர் டத்தோ வீரா இப்ராஹிம் துருக் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள்  30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள் 30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு  ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்