Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அதிப்தி காரணமாக அந்த சண்டை நிகழ்ந்து இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

அதிப்தி காரணமாக அந்த சண்டை நிகழ்ந்து இருக்கலாம்

Share:

செப்பாங்,அக்டோபர் 03-

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளியில் , சாலை நடுவே இரண்டு நபர்களை காரோட்டி ஒருவர், கார் ஸ்டீரெங் இரும்புப் பூட்டு கம்பியினால் தாக்கப்பட்ட சம்பவம், அதிருப்தியின் காரணமாக நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக செப்பாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரின்ரெண்டன் ஷான் கோபால் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை மதியம் 12.17 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக காலை 11.50 மணியளவில் டெங்கில் பட்டணத்தில் சம்பந்தப்பட்ட காரோட்டினால் தாமும், தமது சகாவும் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளதாக ஷான் கோபால் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவரும் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதன் தொடர்பில் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் தனியார் உயர் கல்விக்கூடத்தைச் சேர்ந்த 20 வயது மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவன், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய இரும்புப் பூட்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்தளாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு