Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரி விவகாரம்: விசாரணை நடத்த வழிவிடப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச்.07-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது நடத்தப்படும் விசாரணை முறையாக நடக்க வழிவிடப்பட வேண்டும். அதுவரை அமைதி காக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில் இவ்விவகாரத்தில் விசாரணை நடப்பதற்கு முன்னதாகவே நாம் எந்தவொரு முடிவுக்கும் வந்து விடக்கூடாது. முதலில் விசாரணையை அனுமதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார் .

இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் மேற்கொண்ட சோதனையில் 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும், இன்னும் சில விலை உயர்ந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டு இருப்பது குறித்து கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்படவில்லை. இப்போதுதான் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அவசரப்பட்டு எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைத்து விடக்கூடாது. யாரையும் முன்கூட்டியே தண்டித்து விடக்கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து