Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை - சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்கிறார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை - சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்கிறார் பிரதமர் அன்வார்

Share:

காஜாங், ஏப்ரல்.04-

மலேசியா பொருட்களுக்கு 24 விழுக்காடு பரஸ்பர வரியை விதித்து இருக்கும் அமெரிக்காவின் அதிரடி முடிவு தொடர்பாக விவாதிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சிறப்புக்கூட்டத்திற்கு தலைமையேற்கவிருக்கிறார்.

மலேசியாவுக்கு எதிராக அதன் இறக்குமதி பொருட்களுக்கான பரஸ்பர வரியை 24 விழுக்காடாக உயர்த்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் முடிவால் மலேசியாவின் வர்ததகம் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய சவால்களும், நெருக்குதலும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

மலேசியா உட்பட ஆசியான் வட்டார நாடுகளையும் உள்ளடக்கி 49 நாடுகளை ஒரு பட்டியலில் வைத்து, அதிகமான வரியை டொனால்டு டிரம்ப் நேற்று முன் தினம் அறிவித்து இருந்தார்.

இந்த வரி உயர்வினால் மலேசியாவில் தொழில்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கத்தின் முன்னணி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறப்புக் கூட்டத்திற்கு நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இன்று மாலையில் தலைமையேற்கவிருக்கறார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்