Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் 4 வயது பெண் குழந்தையைக் கொலை செய்து விட்டுத் தாய் தற்கொலை!
தற்போதைய செய்திகள்

கூலிமில் 4 வயது பெண் குழந்தையைக் கொலை செய்து விட்டுத் தாய் தற்கொலை!

Share:

கூலிம், நவம்பர்.05-

தனது காதலர் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததால், மனமுடைந்த 30 வயது பெண், தனது 4 வயது பெண் குழந்தையைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கெடா மாநிலம் கூலிம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 11.05 மணியளவில், கூலிம் தாமான் பேரா என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தின் போது, அப்பெண்ணின் 7 வயது ஆண் குழந்தை உயிர் தப்பியுள்ளார்.

இந்நிலையில், மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அப்பெண்ணின் சடலைத்தைக் கைப்பற்றிய போலீசார், அருகில் 4 வயது பெண் குழந்தையின் சடலத்தையும் கண்டறிந்துள்ளனர்.

தனது தாயாரால் தூக்கில் தொடங்க விடப்பட்ட 7 வயது சிறுவன், மின்விசிறி கீழே விழுந்ததால், கழுத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும் ஸுல்கிஃப்லி அஸிஸான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்