Mar 19, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

யுபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் நீக்கப்பட்டப் பின்னரும் கூட, மலேசிய கல்வி சான்றிதழான எஸ்பிஎம் தேர்வுகளின் முடிவுகள் நிலைத்தன்மையுடன் இருப்பதை அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவுகள் காட்டுவதாகக் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். யுபிஎஸ்ஆருக்கும் பிடி3க்கும் மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அமர்வின் இறுதித் தேர்வான யுஏஎஸ்ஏ, தேர்வு வாரியத்தின் தரநிலைகளின்படி ஆசிரியர்கள் மாணவர்களின் செயல்திறனை விரிவாக மதிப்பிட உதவுகிறது என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் 0.05 விழுக்காடாகவும், இடைநிலைப் பள்ளிகளில் 0.59% விழுக்காடாகவும் குறைந்திருப்பதுடன், அமைச்சு பல்வேறு விரிவான உதவிகளையும் திட்டங்களையும் அமல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் SiPKPM அமைப்பு, இடைநிற்றல் அபாயம் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, இலக்கு சார்ந்த உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்றார்.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு