ரூமா மெஸ்ரா ரக்கியாட் எனப்படும், அரசாங்கத்தின் மக்கள் நட்புறவு வீடமைப்பு திட்டத்தில், வீடு வாங்குவதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருந்த புதிய தகுதிபாட்டில், 5 ஆயிரம் வெள்ளி வருமானம் பெறுகின்றவர்களும் அவ்வீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் ங கோர் மிங் தெரிவித்துள்ளார்.
தற்போது குடும்பத்தின் மொத்த வருமானம் மூவாயிரம் வெள்ளி பெறுகின்றவர்கள் மட்டுமே ரூமா மெஸ்ரா ரக்கியாட் வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
எனினும், அந்த மூவாயிரம் வெள்ளி தகுதிபாடு, 5 ஆயிரம் வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டிற்கான ரூமா மெஸ்ரா ரக்கியாட் திட்டத்தின் கீழ் ஆறு வகையான வடிவமைப்பைக் கொண்ட வீடுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது என்று அமைச்சர் ங கோர் மிங் விளக்கினார்.
மக்கள் தங்களுக்குப் பொறுத்தமான வீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


