ரூமா மெஸ்ரா ரக்கியாட் எனப்படும், அரசாங்கத்தின் மக்கள் நட்புறவு வீடமைப்பு திட்டத்தில், வீடு வாங்குவதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருந்த புதிய தகுதிபாட்டில், 5 ஆயிரம் வெள்ளி வருமானம் பெறுகின்றவர்களும் அவ்வீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் ங கோர் மிங் தெரிவித்துள்ளார்.
தற்போது குடும்பத்தின் மொத்த வருமானம் மூவாயிரம் வெள்ளி பெறுகின்றவர்கள் மட்டுமே ரூமா மெஸ்ரா ரக்கியாட் வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
எனினும், அந்த மூவாயிரம் வெள்ளி தகுதிபாடு, 5 ஆயிரம் வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டிற்கான ரூமா மெஸ்ரா ரக்கியாட் திட்டத்தின் கீழ் ஆறு வகையான வடிவமைப்பைக் கொண்ட வீடுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது என்று அமைச்சர் ங கோர் மிங் விளக்கினார்.
மக்கள் தங்களுக்குப் பொறுத்தமான வீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


