மணல் விநியோக நிறுவனத்திடம் 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டது தொடர்பாக, ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
பினாங்கில் உள்ள ஒரு உணவகத்திலும், SPRM அலுவலகத்திலும் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மணல் விநியோக நிறுவனம் செய்த ஊழல்களை வெளியே சொல்லாமல் இருக்க, 50 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களும் 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.
சுமார் 10 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள மூன்று காசோலைகள் மற்றும் நான்கு கைபேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கு SPRM சட்டம் 2009-ன் கீழ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.








