May 22, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்யப்பட்ட நிலையில் ஆடவர் உடல்
தற்போதைய செய்திகள்

கொலை செய்யப்பட்ட நிலையில் ஆடவர் உடல்

Share:

கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவரின் உடல், கட்டுமானத் தளத்தில் உள்ள ஒரு கொங்சி வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.

முகத்தில் கடும் கத்திக்குத்து கீறல்களுடன் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மியன்மார் பிரஜை, சுயநினைவு இழந்த நிலையில் பேரா, மெங்லெம்பு, தாமான் மெங்லெம்பு அருகில் ஒரு வீட்டில் கிடப்பதாக இன்று அதிகாலை 1.23 மணியளவில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றனர்

அந்த ஆடவரின் முகத்தில் மட்டுமின்றி உடலிலும் பலத்த காயங்கள் காணப்பட்டது. புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த கொங்சி வீட்டில் இருந்த ஒரு பெண் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்.

Related News