புத்ராஜெயா, ஜன.27-
22 கிலோ Syabu போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 38 வயது முன்னாள் மெக்கானிக் ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
அதேவேளையில் அவருடன் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நான்கு இந்தியப்பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறைத் தண்டனை, 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன் 10 பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.
T. அர்ஜுனன் என்ற நபருக்கும், நால்வர் பிடிபட்ட வீட்டிற்கும் தொடர்பு இல்லை என்று கூறி, அந்த மெக்கானிக்கை விடுதலை செய்வதாக நீதிபதி அகமட் கமால் ஷாஹிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அவருடன் கூட்டாக பிடிபட்ட நான்கு இந்தியப் பிரஜைகளான 35 வயது R. மணிகண்டன், 39 வயது S. சதிஸ்குமார், 44 வயது எஸ். சிவபாலன், 32 வயது G. நரேஸ்குமார் ஆகியோருக்கு சிறைத் தண்டனையும், பிரம்படித் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி அகமட் கமால் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.







