Jul 5, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் நாடாளுமன்ற கொறடா பட்டுவின் 30 ஆம் ஆண்டு நிறைவு நாள்
தற்போதைய செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற கொறடா பட்டுவின் 30 ஆம் ஆண்டு நிறைவு நாள்

Share:

கோலாலம்பூர், ஜூலை.15-

ஜசெக.வின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவும், போராட்டவாதியுமான மறைந்த P. பட்டுவின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஜுலை 12 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

மலேசிய மூத்த அரசியல்வாதியாக, மனித உரிமைப் போராட்டவாதியாக தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் உட்பட பன்மொழிகளின் திறன் பெற்றவராக பார்க்கப்பட்ட ஈப்போ சிறுத்தை என்று வர்ணிக்கப்பட்ட P. பட்டு மறைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான இசாவின் ( ISA ) வின் கீழ் இரண்டு முறை கைது செய்யப்பட்டு, தைப்பிங், கமுண்டிங் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவரான முன்னாள் மெங்கலம்பு நாடாளுமன்ற உறுப்பினரான P. பட்டு, மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய சிம்மக் குரலோன் ஆவார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் பலருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் மலேசிய முற்போக்குக் கட்சியின் தலைவர்களான ஈப்போ D. R. சீனிவாசகம் சகோதரர்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற மக்களவையில் சொல்லின் வீரனாகப் பார்க்கப்பட்டவர் P. பட்டு.

ஜசெக.வின் மாதாந்திர சஞ்சிகையான ராக்கெட்டின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பட்டு, பினாங்கு பாகான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, கடந்த 1995 ஆம் ஆண்டு ஜுலை 12 ஆம் தேதி தமது 48 ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.

ஜசெக.வின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் வலது கரமாக விளங்கிய P. பட்டுவைப் போன்ற ஒரு துணிச்சல் மிக்க அரசியவாதி விட்டுச் சென்ற இடம், மலேசிய அரசியல் வானில் இன்னமும் வெற்று இடமாகவே உள்ளது என்பதே சோகம்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது