Apr 17, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மசாஜ் மையங்களில் அதிரடி சோதனை: 11 வெளிநாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மசாஜ் மையங்களில் அதிரடி சோதனை: 11 வெளிநாட்டுப் பெண்கள் கைது

Share:

சிலாங்கூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நேற்று இரவு “ஒப் கேகார்” நடவடிக்கையின் கீழ் புக்கிட் ரிமாவ், செக்சன் 32 பகுதியில் உள்ள பல மசாஜ் மையங்களில் சோதனை நடத்தி, குடிநுழைவு சட்ட மீறல் சந்தேகத்தில் 11 வெளிநாட்டு பெண்களை கைது செய்தனர்.

இந்த நடவடிக்கை இரவு 8 மணியளவில் தொடங்கியதாகவும், சட்டவிரோத சேவைகள் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இடங்களை 37 அமலாக்க அதிகாரிகள் சோதனை செய்ததாகவும் அதன் இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடின் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில், 18 முதல் 47 வயதுக்குட்பட்ட 11 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு பேர் தாய்லாந்து, நான்கு பேர் மியான்மார், இரண்டு பேர் சீனா மற்றும் ஒருவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் என கைருல் அமினஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி வேலை செய்ததாக நம்பப்படுகிறது.

Related News

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது