சிலாங்கூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நேற்று இரவு “ஒப் கேகார்” நடவடிக்கையின் கீழ் புக்கிட் ரிமாவ், செக்சன் 32 பகுதியில் உள்ள பல மசாஜ் மையங்களில் சோதனை நடத்தி, குடிநுழைவு சட்ட மீறல் சந்தேகத்தில் 11 வெளிநாட்டு பெண்களை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கை இரவு 8 மணியளவில் தொடங்கியதாகவும், சட்டவிரோத சேவைகள் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இடங்களை 37 அமலாக்க அதிகாரிகள் சோதனை செய்ததாகவும் அதன் இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடின் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில், 18 முதல் 47 வயதுக்குட்பட்ட 11 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் தாய்லாந்து, நான்கு பேர் மியான்மார், இரண்டு பேர் சீனா மற்றும் ஒருவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் என கைருல் அமினஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி வேலை செய்ததாக நம்பப்படுகிறது.








