புத்ராஜெயா, ஜன - 9
அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (GLC), அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (GLIC) ஆகியவை லாபத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
New Industrial Master Plan, National Energy Transition Roadmap போன்றவை இணைந்து வியூகப் முதலீடுகளை செயல்படுத்துவது மலேசியாவின் பொருளாதார மாற்றத்தை ஆதரிக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர சபையில் பிரதமர் அன்வார் கூறினார்.
இன்று முதல் GLC மற்றும் GLIC ஆகியவை நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் அழைக்கப்படுவதுடன் மடானியின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கினை வழங்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் கேட்டு கொண்டார்.
GLC மற்றும் GLIC நிறுவனங்கள் பணியாளர் நலனை மேம்படுத்தவும், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்தும் மேம்பாட்டினை ஆதரிக்கவும் அவர் குறிப்பிட்டார்.








