வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, ஜோகூர், தங்காக், ஓய்வுத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதர மூவர் உயிர் தப்பினர். மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து, இன்று காலை 4.20 மணியளவில் நிகழ்ந்தது.
இசுசு வகையை சேர்ந்த 5 டன் லோரி, ஒரு ஹினோ ரக லோரி, 5 டன் எடைகொண்ட மற்றொரு ஹினோ லோரி ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
இசுசு லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். அவர்களின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்புப்படையினர் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தினர். உடல்களை அகற்றும்பணி காலை 6.05 மணிக்கு நிறைவுப்பெற்றதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.








