Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், இல்லையேல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்: ஃபட்லீனாவிற்கு எதிராக அமைதி மறியல்
தற்போதைய செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், இல்லையேல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்: ஃபட்லீனாவிற்கு எதிராக அமைதி மறியல்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.21-

மாணவர்கள் நலன் சார்ந்த தங்களின் 6 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் அல்லது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுங்கள் என்று கோரி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கிற்கு எதிராக இன்று அமைதி மறியல் நடைபெற்றது.

புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் கட்டடம் முன் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த அமைதி மறியலில் தாங்கள் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் அமைச்சர் ஃபாட்லீனா நிறைவேற்ற வேண்டும் என்று தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவ்வாறு நிறைவேற்றத் தவறினால், கல்வி அமைச்சர் பதவியிலிருந்து ஃபாட்லீனா சீடேக் உடனடியாக விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பகடிவதைக்கு ஆளான முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா விவகாரம் உட்பட கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் மாணவர் நலன், அவர்களின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கல்வி அமைச்சர் என்ற முறையில் ஃபாட்லீனா சீடேக் அமல்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

‘உண்டுர்ஃபாட்லீனா’ என்ற வாசகம் உட்பட பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்திய நிலையில் நடைபெற்ற இந்த அமைதி மறியலை கபுங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் சே-மலேசியா மற்றும் ஹிம்புனான் அட்வோகாசி ரக்யாட் மலேசியா ஆகிய இரு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. சுமார் 20 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஃபாட்லீனாவிடம் நேரடியாகக் குறிப்பாணையை வழங்குவதே இந்த அமைதி மறியலில் நோக்கமாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வழங்கிய மகஜரை அமைச்சர் ஃபாட்லீனா சார்பில் கல்வி அமைச்சின் அதிகாரி ஃபாயிஸ் ரஷிட் பெற்றுக் கொண்டார்.

Related News

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு