கடந்த சனிக்கிழமை, ஹரி ராயா பெருநாள் அன்று, மாலை 6.45 மணியளவில் தமது வீட்டிற்கு அருகில் உள்ள சாலையில், மோட்டார் சைக்கிள்களை முறுக்கியவாறு, அராஜகத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் மாட் ரெம்பேட் கும்பலை விரட்டுவதற்கு நபர் ஒருவர் இரண்டு கைத்தடிகளுடன் களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, கெமாமான் போலீசார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
கோலா திரெங்கானு-குவாந்தான் சாலையில், கெலிகா என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.
26 விநாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொளியைத் தொடர்ந்து, விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


