கடந்த சனிக்கிழமை, ஹரி ராயா பெருநாள் அன்று, மாலை 6.45 மணியளவில் தமது வீட்டிற்கு அருகில் உள்ள சாலையில், மோட்டார் சைக்கிள்களை முறுக்கியவாறு, அராஜகத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் மாட் ரெம்பேட் கும்பலை விரட்டுவதற்கு நபர் ஒருவர் இரண்டு கைத்தடிகளுடன் களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, கெமாமான் போலீசார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
கோலா திரெங்கானு-குவாந்தான் சாலையில், கெலிகா என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.
26 விநாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொளியைத் தொடர்ந்து, விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


