Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மாட் ரெம்பேட்டை விரட்ட களத்தில் இரங்கிய நபர்
தற்போதைய செய்திகள்

மாட் ரெம்பேட்டை விரட்ட களத்தில் இரங்கிய நபர்

Share:

கடந்த சனிக்கிழமை, ஹரி ராயா பெருநாள் அன்று, மாலை 6.45 மணியளவில் தமது வீட்டிற்கு அருகில் உள்ள சாலையில், மோட்டார் சைக்கிள்களை முறுக்கியவாறு, அராஜகத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் மாட் ரெம்பேட் கும்பலை விரட்டுவதற்கு நபர் ஒருவர் இரண்டு கைத்தடிகளுடன் களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, கெமாமான் போலீசார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

கோலா திரெங்கானு-குவாந்தான் சாலையில், கெலிகா என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

26 விநாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொளியைத் தொடர்ந்து, விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News