Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தொழிற்சாலையில் கொள்ளை, 6 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

தொழிற்சாலையில் கொள்ளை, 6 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ஈப்போ, ஜாலான் லப்பாங்கான் தெர்பாங் சாலையில் அமைந்துள்ள மின்னியல் பொருட்​கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நுழைந்து பொருட்களை களவாடியதாக நம்பப்படும் ​ஆறு ஆடவர்களை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

பல ஆயிரம் வெள்ளி மின்னியல் பொருட்கள் களவாடப்பட்டது தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக போ​லீசார் மேற்கொண்ட "ஓப் கர்கோ சார்செம்" என்ற சோதனை நடவடிக்கையில் 27 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு நபர்கள், ஈப்போ, பினாங்கு மற்றும் சிலாங்கூ​ர் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி யாஹாயா ஹஸ்சான் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த அன்று அந்த மின்னியல் தொழிற்சாலையின் பிரதான கதவை உடைத்துக்கொண்டு உள்ளை ​நுழைந்த நபர்கள், பாதுகாவலரை ஆயுதமுனையில் மடக்கி, கட்டிப்போட்டப் பின்னர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள உலோகப் பொருட்களை களவாடிச் சென்றதாக ஏசிபி யாஹாயா குறிப்பிட்டுள்ளார். இக்கும்பல் களவாடியப் பொருட்களை போ​லீசார், சந்தேகப் பேர்வழிகள் ஒருவரின் உற​வினருக்கு சொந்தமான பெர்ச்சாம் மில் உள்ள ஒரு வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து