Mar 25, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆடவருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு

Share:

ஜூலை 27-

வயது குறைந்த பெண்ணை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓடிய 20 வயது இளைஞரின் தடுப்புக்காவலை போலீசார் நீடித்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

அந்த நபருக்கான தடுப்புக்காவல், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 17 வயதுடைய அந்த இளம் பெண், காணாதது குறித்து கடந்த ஜுலை 24 ஆம் தேதி உலு சிலாங்கூர் மாவட்ட போலீசார் அந்தப் பெண்ணின் தந்தையிடமிருந்து புகார் பெற்றனர்.

அந்தப் புகாரை அடிப்படையாக கொண்டு தேடல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்ட போது அந்தப் பெண், பகாங், Triang- கில் உள்ள அந்த இளைஞரின் உறவுக்காரரின் வீட்டில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக Datuk Hussein Omar தெரிவித்தார்.

Related News