எல்மினாவில் கத்ரி நெடுங்சாலையில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் உயிரிழந்த பத்து பேரில் ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக இருந்தது என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்தார். இதர எண்மரின் உடல்கள் சிதறிய நிலையில், அந்த நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக கண்டுபிடிக்க முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். மீட்கப்பட்ட இதர ஒன்பது பேரின் சடலங்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் மேலும் விவரித்தார். தவிர அந்த நெடுஞ்சாலையில் உயிரிழந்த மற்றொரு வாகனமோட்டி, Grab ஓட்டுநரா? அல்லது காரில் பயணம் செய்தவரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று சம்பவ நிகழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஐஜிபி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


