எல்மினாவில் கத்ரி நெடுங்சாலையில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் உயிரிழந்த பத்து பேரில் ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக இருந்தது என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்தார். இதர எண்மரின் உடல்கள் சிதறிய நிலையில், அந்த நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக கண்டுபிடிக்க முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். மீட்கப்பட்ட இதர ஒன்பது பேரின் சடலங்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் மேலும் விவரித்தார். தவிர அந்த நெடுஞ்சாலையில் உயிரிழந்த மற்றொரு வாகனமோட்டி, Grab ஓட்டுநரா? அல்லது காரில் பயணம் செய்தவரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று சம்பவ நிகழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஐஜிபி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


