Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

Share:

டிச. 23-

இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவை முன்னாள் காவல்துறைத் தலைவர் மூசா ஹசன் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹன்னா யோ மலேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற முயன்றதாக மூசா கூறியதாக ஹன்னா யோ அந்த வழக்கைத் தொடுத்திருந்தார், ஆனால், ஹன்னா யோ தனது குற்றச்சாட்டை போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்று நீதித்துறை ஆணையர் Arziah Apandi கூறினார்..

நீதிமன்றம் மூசாவுக்கு வழக்கு செலவுகளுக்காக 40 ஆயிரம் ரிங்கிட் வழங்கியது. மூசா UiTM இல் ஆற்றிய உரையில் ஹன்னா யோவைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றும், அவரது கருத்துக்கள் பெரும்பாலும் மற்றவர்களைக் குறிப்பிடுவதாகவும் நீதிமன்றம் கூறியது. மேலும், அந்த உரை குறைந்த அளவிலான மக்களால் மட்டுமே பார்க்கப்பட்டது என்றும், அதில் யோவிற்கு எதிரான எதிர்மறை கருத்துக்கள் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மூசா நாட்டின் முன்னாள் காவல்துறைத் தலைவர் என்றும், தேசிய பாதுகாப்பு குறித்து பேசுவது அவரது கடமை என்றும் நீதிமன்றம் கூறியது. அவர் கூறிய கருத்துக்கள் ஒரு விரிவுரையாளரின் ஆய்வின் அடிப்படையில் அமைந்தவை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக யோவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். யோ, மூசா மீது 2020 ஆம் ஆண்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related News